திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் கிரிவலம் செய்த நடிகை ஆத்மிகா!

Fri, 09 Feb 2024-11:51 am,

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஆத்மிகா தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டார்.

 

தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு திருவண்ணாமலையில் 14 கிமீ தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க திருக்கோவிலில் தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டார். 

 

திருநேர் அண்ணாமலையார் திருக்கோவிலில், பழனி ஆண்டவர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட அவர் வழிநெடுகிலும் நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் மேற்கொண்டார்.

 

நெற்றியில் பட்டை வைத்துக்கொண்டு கிரிவலப் பாதையில் பல்வேறு திருக்கோவிலில் கற்பூரமேற்றி வழிபட்டார். தற்பொழுது நடிகர் அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் என்ற படத்தில் ஆத்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக இன்று மாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடிகை ஆத்மிகா சாமி தரிசனம் செய்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link