பிகினி உடையில் உலா வரும் கீர்த்தி பாண்டியன்! வைரல் புகைப்படங்கள்..

Fri, 19 Jul 2024-12:05 pm,

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், கீர்த்தி பாண்டியன். தமிழ் குணச்சித்திர நடிகரான அருண் பாண்டியனின் மகளான இவர், தும்பா படம் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். 

இயற்கையாகவே சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது தந்தை வைத்திருந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர்கள் முதன் முதலில் தயாரித்த படம், சவாலே சமாளி. இதில், அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். 

ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் ஆரம்பத்தில் நல்ல நட்புடன் பழகினர். பின்னர் காதலர்களாக மாறினர். 

அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் 10 வருடங்களாக காதலிக்க, இவர்களின் இந்த உறவு கடந்த ஆண்டு திருமணத்தில் முடிந்தது. கோலிவுட் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த இன்னொரு அழகிய திருமணமாக இருந்தது, இவர்களின் திருமணம். 

திருமணத்திற்கு முன்பே அசோக் செல்வனும் கீர்த்தியும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம், நல்ல வரவேற்பை பெற, படத்தில் இருந்த இவர்களின் கெமிஸ்ட்ரியும் ஒரு காரணமாக இருந்தது. 

கீர்த்தி பாண்டியன், ஆரம்பத்தில் இருந்தே தனக்கு தோன்றும் கருத்துகளை நேர்பட பேசி பழகியவர். இவர் தனது நிறம் குறித்தும், நிறத்தால் தான் ஒதுக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பேசிய வீடியோக்களும் வைரலாகி இருக்கிறது. 

கீர்த்தி பாண்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

பிகினி உடையில் பீச்சில் வலம் வரும் இவரது போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link