இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

Sat, 24 Aug 2024-1:48 pm,

ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டாலே போதும், எப்போது குழந்தை என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுவர். முதல் குழந்தை பிறந்துவிட்டாலே, அடுத்த குழந்தை எப்போது என இன்னும் சில வருடங்களில் கேட்க ஆரம்பித்து விடுவர். 

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது, ஒரு சிலருக்கு அவர்களின் விருப்பமாக இருக்கலாம். ஒரு சிலர், சமூகத்தின் அழுத்தத்தின் காரணமாக பெற்றுக்கொள்வர். அப்படி 2வது குழந்தை பெற்றுக்கொள்வது உங்களின் விருப்பம் என்றால், அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

துணை:

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதால், குழந்தைகள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். பெற்றொர்கள், அவர்களின் ஆயுட்காலம் முடிந்த பிறகும், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கொள்வர்.

அனுபவம்:

முதல் முறை கர்ப்பம் தரித்த போதும், தாய்மை உணர்வின் போதும் ஏற்பட்ட அனுபவம், இரண்டாவது குழந்தையை சரியான முறையில் வளர்க்க உதவும். 

பிரச்சனையை தீர்க்கும் திறன்:

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது, எப்படி பெற்றோராக இருக்க வேண்டும் என்ற ஐடியாவே பல பெற்றோருக்கு இருக்காது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் போது முதல் முறை என்னென்ன பிரச்சனைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று தெரிந்து விடும். 

அன்பு:

இரண்டாவது குழந்தைக்கு, முதல் குழந்தைக்கு கிடைத்ததை விட அன்பு அதிகமாகவே கிடைக்கும். இதனால், அந்த குழந்தை நல்ல சூழலில் வளரும். 

பயம் இருக்காது:

முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது இருந்த பயம், இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. அந்த குழந்தையும், ஒரு வயது வளர்ந்த பின்னர் இரண்டாவது குழந்தை வளர்ப்பில் உறுதுணையாக இருக்கும். இதனால், தனியாக இருக்கிறோம் என்ற பயம் தாய்க்கு இருக்காது. 

குழந்தைகளுக்கு பயம் விலகும்:

முதல் குழந்தை இருக்கும் போது, இரண்டாவது குழந்தைக்கு பெரிதாக பயம் இருக்காது. முதல் குழந்தைக்கு, இரண்டாவது குழந்தைக்கு அங்கீகரிக்கப்படாத பெற்றோராகவே இருக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link