28 நாட்களுக்குப் பிறகு இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனியின் அருள் கிடைக்கும்

Wed, 24 May 2023-12:47 pm,

கேந்திர திரிகோண ராஜயோகம்: சனி பகவான் வக்ர நிலையில் நகர்ந்து கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குவார். இந்த ராஜயோகம் 5 ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தரும். அதுமட்டுமின்றி சனியின் அருளால் இவர்களின் பிரச்சனைகள் நீங்கி அரசன் போல் வாழ்வார்கள்.

 

மேஷ ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். உங்கள் நிதி சவால்களும் குறையும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

 

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். விரும்பிய வேலை கிடைக்கும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் புதிய பொறுப்பையும் பெறலாம்.

 

மிதுன ராசி: நீண்ட நாட்களாக சிக்கிய பணம் சனியின் அருளால் இந்த நேரத்தில் மீட்கப்படும். அதுமட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். பணவரவு கிடைக்கும்.

 

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் இயங்கத் தொடங்கும். இந்த காலகட்டத்தில் வணிகம் தொடர்பான ஒப்பந்தத்தையும் முடிக்க முடியும்.

 

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன் கிடைக்கும். இதன் போது, ​​இவர்களின் வங்கி இருப்பு மிகப்பெரிய அளவில் உயரும். பணத்தை சேமிக்க முடியும். அதே நேரத்தில், வசதிகளும் அதிகரிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link