சாப்பிட்ட பிறகு இந்த 4 தவறை மட்டும் செய்ய வேண்டாம்! வயிற்றில் வலி ஏற்படும்!

Mon, 09 Sep 2024-12:34 pm,

உணவை கண்ட நேரத்தில் சாப்பிடாமல் சரியான நேரத்தில் எடுத்து கொள்வது முக்கியம். இல்லை என்றால் உணவு ஜீரணம் ஆகா நேரம் எடுத்து கொள்ளுங்கள். இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும்.

 

காலை, மாலை, இரவு என எப்போது சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் நடப்பது நல்லது. இது செரிமான செயல்முறையை எளிதாக்கும். 

 

சாப்பிட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், கூலிங் தண்ணீரை குடிக்க கூடாது. இதன் காரணமாக செரிமானம் பாதிக்கப்பட்டு,  வயிற்றுவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

 

சாப்பிட பிறகு உடனே குளிப்பதை நிறுத்த வேண்டும். குளிக்கும் போது உடலில் இருக்கும் சூடு வெளியேறுகிறது. இதன் காரணமாக செரிமானம் மெதுவாக நடைபெறும். 

 

சாப்பிட்ட சில நிமிடங்களில் உட்காரவோ அல்லது படுக்கவோ கூடாது. இந்த பழக்கம் இருந்தால் உடனே மாற்றி கொள்வது நல்லது. இதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சாப்பிட பிறகு டீ அல்லது காபி குடிக்க கூடாது. ஏனெனில் இவை வயிற்றில் அசிடிட்டியை உண்டாக்கும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link