நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடலில் இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!

Tue, 25 Jun 2024-9:01 pm,

ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும் தோலில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

ஏசி அறைகளில் நீண்ட நேரம் இருந்தால் வறண்ட காற்று உடலில் இருந்து அதிக நீர் இழப்பை ஏற்படுத்தும். இதனால் தோல் வறட்சி, சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

ஏசியை சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் இருந்து வரும் தூசி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும் சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும். 

ஏசியில் இருந்து வரும் வறண்ட காற்று, கண்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். 

ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் தசைகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பை ஏற்படுத்தும். இதனால் வலி அதிகரிக்கும். மேலும் இது மந்தமான உணர்வு மற்றும் ஆற்றல் அளவுகளை குறைக்கலாம்.

நீண்ட நேரம் ஏசியில் இருந்து வெளியில் வந்தால் உடல் சூடு மாறி திடீர் தலைவலியைத் தூண்டும். இது பெரும்பாலும் இரத்த நாளங்களின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link