Health Tips: இந்த செய்தியை படிச்சா பூசணி விதைகளை தூக்கி எறிய மாட்டீங்க!

Thu, 05 Jan 2023-11:56 pm,

பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆற்றல் சீராக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் வேலை பளுவின் காரணமாக ஆற்றல் குறைவாகவே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இது ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை புற்று நோயை தடுக்க உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

பூசணி விதைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும் அதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 

பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link