முளை கட்டிய தானியங்கள்: ஆரோக்கியத்தின் களஞ்சியம், கண்டிப்பா சாப்பிடுங்க!!

Fri, 23 Dec 2022-6:37 pm,

முளை கட்டிய தானியங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இத்தகைய தானியங்களை உண்பதால் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகரிக்கிறது. 

 

சோயாபீன் மற்றும் பச்சை பயறுகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நல்ல அளவில் காணப்படுகின்றன. அவற்றில் மக்னீசியமும் காணப்படுகிறது. முளைத்த தானியங்களை தினமும் சாப்பிடுவதால், தசைகள் வலுவடையும், அவற்றில் வலியால் வரும் பிரச்சனை இருக்காது.

 

முளை கட்டிய தானியங்களில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. 

முளை கட்டிய சோயாபீன், நிலவேம்பு ஆகியவற்றை சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ஆரோக்கியமான முளைகளை சாப்பிடுவதன் மூலம், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்கள் நீங்கும். ஊறவைத்த தானியங்களின் ஆண்டிஆக்சிடெண்டுகள் சருமத்தில் உள்ள செல்களை மேம்படுத்துகின்றன.

முளைத்த தானியங்களை காலை உணவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த முளைகளை உண்பதால் அதிக சக்தி கிடைப்பதுடன் நீண்ட நேரம் பசி எடுக்காது. குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்வதால் எடை குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link