`பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது”- விவேகானந்தரின் சில வரிகள் !

Tue, 22 Oct 2024-4:25 pm,

பொய் சொல்லித்தப்பிகாதே உண்மையை சொல்லி மாட்டிகொள் என்று சொன்னது சிவாமி விவேகானந்தர். உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தரை  தெரியும். அவரின் சொற்பொழுவுகள் கேட்பதற்கு இனிமையாகவும்,அர்த்தமுள்ளதாகவும் அமையும்

உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை. எதையும் சாதிக்க முடியும் என்று நம்புங்கள் இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்

யார் உங்களுக்கு உதவுகிறார்களோ,அவர்களை மறந்துவிடாதீர்கள். யார் உங்களை நேசிக்கிறாகளோ, அவர்களை வெறுத்து விடாதீர்கள்.யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள் - சுவாமி விவேகானந்தர்.

அறிவு, உள்ளம் இரண்டிலும் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். இதயம் சொல்வதை செய், தோல்வியோ வெற்றியோ அதை தாங்கும் சக்தி அதனிடமே உள்ளது - சுவாமி விவேகானந்தர்.

கோழையோ முட்டாளோ என்விதி என்பான், ஆனால் ஆற்றல் மிக்கவன் என் விதி நானே வகுப்பேன் என்பான். உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் உண்மையைத் துறக்காதே - சுவாமி விவேகானந்தர்.

கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார், அதில் துணிச்சல் தெரியும், அதைப் புரிந்துக்கொண்டால் துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும் - சுவாமி விவேகானந்தர்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று  நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்- சிவாமி விவேகானந்தர்.

 

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே, நீ சாதிக்கப் பிறந்தவன், துணிந்து நில், எதையும் வெல். நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார், ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை - சுவாமி விவேகானந்தர்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link