கோடி ரூபாய் சம்பளம் கிடைத்தபோதும் நான் அதை செய்யவில்லை - அனிரூத்

Sun, 04 Jun 2023-6:57 pm,

ஐபிஎல் 2023 போட்டியில் ஐந்தாவது முறையாக தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. கடந்தாண்டு இந்த அணி படுதோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு கடைசி தருணத்தில் என்ன நடக்கும் என்ற பல எதிர்பார்ப்புக்கு இடையே குஜராத்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை சிஎஸ்கே அணி வென்றது.

 

திரைபிரபலங்களும் பலர் சிஎஸ்கே போட்டியை காண மைதானத்தில் வந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினர். குறிப்பாக அனிரூத் சென்னை சூப்பர் கிங்ஸின் டை ஹார்ட் பேன். 

 

அப்படியிருந்தும் அந்த அணிக்காக ஒரு விஷயத்தை செய்ய மறுத்திருக்கிறார் அவர். அது என்ன தெரியுமா?, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தீம் சாங் கம்போஸ் பண்ணும் வாய்ப்பு தேடி வந்தபோது அதை அவரே நிராகரித்திருக்கிறார்.

 

2018 ஆம் ஆண்டு காம்பேக் கொடுத்த சிஎஸ்கேவுக்கு புதிதாக காம்பேக் தீம் சாங் கம்போஸ் பண்ணுமாறு சிஎஸ்கே அணி, அனிரூத்திடம் ஒரு கோடி வரை சம்பளமாக கொடுத்துள்ளனர். ஆனால் தன்னால் சிஎஸ்கே அணிக்கு தீம் சாங் பண்ணமுடியாது என கூறியிருக்கிறார் அனிரூத்.

 

தோனியின் தீவிர ரசிகனான தனக்கே விசில் போடு பாடல் பிடித்தது என்றும் அதற்கு நிகராக தன்னால் மற்றொரு தீம் சாங் ரெடி பண்ண முடியாது என கூறியிருக்கிறார். 

 

மேலும், தனக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார் அனிரூத்.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link