செவ்வாய் பெயர்ச்சி: புரட்டாசி மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!

Thu, 15 Sep 2022-4:43 pm,

செவ்வாய் கிரகம் பலம், வீரியம், பலம் ஆகியவற்றுக்கு காரணமான கிரகமாக இருக்கும் இடத்தில், சுக்கிரன் செல்வ வளம், கலை, காதல், ஈர்ப்பு, அழகுக்கு காரணமான கிரகம். செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி புதன்கிழமை,  தனது ராசியான மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் உள்ள சுக்கிரனின் முதல் ராசிக்கு மாறினார். ரிஷப ராசியில் செவ்வாய் 14 அக்டோபர் 2022  வரை வெள்ளிக்கிழமை வரை தங்கி தனது செல்வாக்கை நிலைநாட்டுவார்.செவ்வாய் கிரகத்தின் இந்த ராசி மாற்றம் காரணமாக சில ராசிகள் பணம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் பெறுவார்கள். இந்த புரட்டாசி மாதம் அவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தரும் மாதமாக இருக்கும். 

விருச்சிகம்: செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே, இந்த காலக்கட்டத்தில் இந்த ராசிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். இந்த ராசிக்காரர்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவார்கள். ணியிடத்தில் பாராட்டு பெறுவார்கள்.

சிம்மம்: ரிஷப ராசியில் செவ்வாயின் பிரவேசத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அமோகமான நாட்கள் தொடங்கியுள்ளன. இந்த ராசிக்காரர்கள் வரும் 25 நாட்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். இந்த காலகட்டத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மேலும்,  சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம் தொழில் விரிவடைவதும் நன்மை தரும்.

கன்னி: ஜோதிடத்தின் படி, இந்த  காலகட்டம் கன்னி ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் பல தடைப்பட்ட வேலைகள் நிறைவேற்றப்படலாம். நீங்கள் வணிகம் தொடர்பாக பயணம் செய்யலாம், இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். போட்டி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில், எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link