Astro Traits: தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் திறன் கொண்ட ‘சில’ ராசிகள்!

Wed, 14 Dec 2022-8:48 pm,

சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் மிகவும் சாதுரியமாக தீர்க்கும் திறன் பெற்றவர்கள்,  அவர்கள் தோல்வியடையும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மக்கள் அவரைத் தங்கள் தலைவனாக எளிதாகக் கருதுவதற்கு இதுவே காரணம். ஜோதிட சாஸ்திரப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் நினைத்ததை நிறைவேற்றினால் தான் நிம்மதி அடைவார்கள். வாழ்க்கையில் அனைவருடம் நேர்மையாக இருப்பார்கள். ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள். அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். எனவே எதிரிகளின் பாதி தைரியம் அவர்களின் நம்பிக்கையைப் பார்த்த பிறகு காணாமல் போய்விடுகிறது.

 

சிம்மம்: இவர்கள் பேசுவதில் வல்லவர்கள். பிறவியிலேயே தலைமை பண்பு கொண்டவர்கள். அவர்கள் எதிராளியை சமாளிக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள்.  இவர்களது ராசியின் பெயருக்கு ஏற்ப காட்டில் சிங்கம் போல் மிகவும் பயம் ஏதும் இல்லாமல், தைரியம், தன்னம்பிக்கை உள்ளவர்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் ஆயிரம் விஷயம் பொதிந்திருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். மக்களின் எண்ணங்களை உணரும் திறன் கொண்டவர்கள். எனவே எவரையும் எளிதில் அடக்கிவிடுவார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link