விபரீத ராஜயோகம் இந்த ‘4’ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைத் தரும்!

Mon, 07 Feb 2022-3:42 pm,

விபரீத ராஜயோகத்தால், இந்த 4 ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம், அரசியல் போன்றவற்றில் மகத்தான வெற்றியைப் பெறலாம். இது தவிர, நாள்பட்ட நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். இந்த காலத்தில் அவர்களுக்கு நிறைய பணத்தையும் கொடுக்கும்.

இந்த விபரீத ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம். திடீர் ஆதாயம் உண்டாகலாம். ஒரு முக்கியமான ஒப்பந்தம் முடிவடையும். முதலீடு செய்ய இது நல்ல நேரம். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்.

விபரீத ராஜயோகம் விருச்சிக ராசியினருக்கு திடீர் செல்வத்தைத் தரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் இருந்தும் பணம் வரும். அரசியலில் லாபம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய சலுகைகள் கிடைக்கும்.

விபரீத ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும் பண பலன்களை தரும். வருமானம் அதிகரிக்கும், நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் குறிப்பாக நன்மை அடைவார்கள். முதலீட்டில் லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். அரசியல்வாதிகளுக்கு பெரிய வெற்றி கிடைக்கும்.

விபரீத ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் திடீர் பெரிய லாபத்தை தரும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். அரசியல் மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் பெரிய பதவியைப் பெறுவார்கள். எதிர்காலத்திற்காகவும் நீங்கள் பெரிய அளவில் சேமிக்க முடியும். பங்குச்சந்தையில் திடீர் லாபமும் கை கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link