பலன்களை அள்ளிக் கொடுக்கும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் இன்றே சேரவும்!

Tue, 02 May 2023-9:32 pm,

இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனா, (APY) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு, சந்தாதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ 1000 முதல் ரூ 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசால் உறுதிப்படுத்தப்படுகிறது. 

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் ரூ.1000 முதல் ரூ.5000 வரை உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மாதம் ரூ.42 முதல் ரூ.1,454 வரை பங்களிக்க வேண்டும்.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம்.

சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு சந்தாதாரரின் மனைவிக்கும் அதே ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் இறந்த பின், சந்தாதாரரின் 60 வயது வரை சேர்ந்த ஓய்வூதிய நிதி நாமினிக்கு திருப்பித் தரப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link