தீராத பண பிரச்சனையா! பண மழை பெய்ய உதவும் ‘கோதுமை மாவு’ பரிகாரம்..!!

Sun, 01 Aug 2021-12:56 pm,

உங்கள் வீட்டில் கோதுமை மாவு வைக்கப்பட்டுள்ள. டப்பாவில் 5 துளசி இலைகள் மற்றும் 2 குங்குமப்பூ  வைக்கவும். இதன் மூலம் உங்கள் பண நெருக்கடியிலிருந்து விடுபட்டு வாழ்க்கை, வளமாகும். 

தந்திர சாஸ்திரத்தின்படி, வியாழக்கிழமை மாவில் சிறிது மஞ்சள் கலந்து பசுவிற்கு உணவளிப்பது வருமானத்தை பெருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த பரிகாரம் வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. இதனால், வீட்டில் பணம் தங்கும்.

 

இந்த பரிகாரத்தின் கீழ், நீங்கள் சனிக்கிழமைகளில், கோதுமை மாவை மாவு அரைத்தால், வீட்டில் வருமான ஆதாரங்கள் அதிகரித்து நிதி நெருக்கடி நீங்கும். இது தவிர, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நல்லுறவு இருக்கும். மேலும் கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன்  சிறிது உளுந்தையும் சேர்க்க வேண்டும். இதனால், வீட்டில் பணம் தங்கும்.

மாவில் சிறிதளவு சர்க்கரை கலப்பதால், பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நிரந்தரமாக நீக்கப்பட்டு, அதிர்ஷ்டம் பெருகும். இது தவிர, சனி, ராகு மற்றும் கேதுவின் பாதிப்பும் நீங்கும்.

வேலையில் பதவி உயர்வு அல்லது வியாபாரத்தில் செழிக்க பரிகாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், கோதுமை மாவு மற்றும்  வெல்லம் கொண்டு அப்பம் செய்து  பசுவிற்கு உணவளிக்கவும். தந்திர சாஸ்திரத்தின் படி, இதைச் செய்வதன் மூலம் வேலை மற்றும் வணிகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

இந்த பரிகாரங்கள் ஜோதிட சாஸ்திரம் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் இவற்றை உறுதி செய்யவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link