Gulkand vs Pregnancy: கர்ப்பமான பெண் குல்கந்து சாப்பிட்டால் ரோஜா போல குழந்தை பிறக்குமா

Sat, 16 Apr 2022-2:40 pm,

குல்கந்தில் குளிர்ச்சியூட்டும் பண்பு இருப்பதால் கோடையில் இதை உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் குல்கந்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம், இது, நெஞ்செரிச்சல், வயிற்றில் வாயு உருவாவது மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நிவர்த்தியாக்கும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். மலச்சிக்கலை தடுக்கும் தன்மை இருப்பதால், கர்ப்பிணிகள் குல்கந்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்களின் தோல் அடிக்கடி வறண்டு போய்விடும். குல்கந்தில் உள்ள பண்புகள் சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது, இதன் காரணமாக சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அவர்கள் மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏர்படும். குல்கந்தில் இருக்கும் பண்புகள், மன அமைதியை ஏற்படுத்தும்

கர்பிணிகள் குல்கந்தை சாப்பிட்டால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கருப்பையை குளிர்விக்கும் பண்பு குல்கந்துக்கு உண்டு என்பதால் இப்படி சொல்லப்படுகிறது. உண்மையில், குல்கந்து கருவுற்ற பெண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதால், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே அடிப்படையான விஷயம்

ரோஜா மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் குல்கந்து உடலுக்கு மிகவும் நன்மை தரும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link