நீரிழிவு கட்டுக்குள் இருக்க... இயற்கையாக இன்சுலினை சுரக்க செய்யும் ‘சில’ உணவுகள்

Tue, 01 Aug 2023-5:25 pm,

இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவைதான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.தொடர்ந்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகளை எடுத்துகொண்டால் நாளடைவில் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுக்குள் வரும்.

வெந்தயம்: வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சரியான அளவில் கொண்டு வருகிறது. வெந்தயத்தில் ட்ரைகோனெல்லின் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. 

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை கிட்டத்தட்ட நமது கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.

மஞ்சள்: மஞ்சளில் அதிக அளவு குர்குமின் உள்ளது. மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது. குர்குமின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடைவதை தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால்,  சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. 

பாகற்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு. இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும். 

வெண்டைக்காய்: வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link