சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்

Fri, 13 Sep 2024-12:03 pm,

நீரிழிவு நோய் சமீப காலங்களில் உலக மக்களை அதிக அளவில் பாதித்து வருகின்றது. அதுவும் இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு இங்கு சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. 

உயர் இரத்த சர்க்கரை அளவு,  இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், குருட்டுத்தன்மை மற்றும் நரம்பு பாதிப்பு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோய்க்கு சிகிச்சை இல்லை. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருந்துகளால் அதை கட்டுக்குள் வைக்க முடியும். சில மசாலாப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகள் தூங்கும் முன் தண்ணீரில் கலந்து சாப்பிடக்கூடிய 5 மசாலாப் பொருட்கள் பற்றி இங்கே காணலாம். 

ஓமத்தில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் அதிகமாக உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரிய அளவில் உதவுகின்றன. ஓம தண்ணீர் செரிமானத்தை சீராக்குவதிலும், உடலில் உள்ள வீக்கத்தை குறைப்பதிலும் உதவுகின்றது. ஓமத்தின் பண்புகள் நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கிராம்பு சுகர் அளவை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியையும் மேம்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சுகர் நோயாளிகள் தினம் கிராம்பு நீரை உட்கொள்ளலாம்.

சீரகம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு மசாலா பொருளாக பார்க்கப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவியாக இருக்கும். ஜீரண சக்தியையும் சீரகம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக எடை இழப்பை குறைக்க நினைப்பவர்களும் சீரக நீரை தினமும் குடிக்கலாம்.

 

வெந்தயத்தில் உள்ள பண்புகளில் நீரிழிவு எதிர்ப்பு சக்தி உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாம் உணவை ஜீரணிப்பதில் பெரிய அளவில் வெந்தயம் உதவுகின்றது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கவும் வெந்தயத்தை பயன்படுத்தலாம். இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அந்த நீரை குடிப்பது சுகர் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இலவங்கப்பட்டைஇரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பெரிய அளவில் உதவுகின்றது. இதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த நீர் உதவும். தினமும் இரவில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

இந்த பொருட்களை தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த பொடியை தேநீரில் சேர்த்து உட்கொள்ளலாம். இது தவிர இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் பொடியை சேர்த்து குடிப்பது நல்லது. தினசரி உணவை சமைக்கும் போதும் அவற்றில் இந்த பொடிகளை சேர்க்கலாம்.

இந்த பொடிகளுக்கு தனித்துவமான தன்மைகள் உள்ளன. சிலருக்கு இவை ஒப்புக்கொள்ளாமல் போகலாம். ஆகையால் இவற்றை பயன்படுத்த துவங்கும் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற பொடியை தேர்ந்தெடுப்பதில் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். 

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link