தமிழ்நாட்டில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய 5 வரலாற்று இடங்கள்!

Sun, 08 Sep 2024-8:04 pm,

தமிழ்நாடு கோயில்களின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பல வரலாற்று படிவங்கள் நிறைந்துள்ளன. பெரிய கோவில்கள் தொடங்கி, அரண்மனைகள், மாளிகைகள் இங்குள்ளன.

விவேகானந்தர் சிலை, கன்னியாகுமாரி

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு சின்னம் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். விவேகானந்தர் நினைவாக 1970ல் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. 

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை

பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி சென்னையில் கட்டியது தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டை உலக போர் சமயத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு தனித்துவமான வரலாற்று அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு கொடுக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவில் அதன் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. இந்தக் கோயில் இந்தியாவிலேயே மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகும்.

திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, 1636ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்குள்ள பெரிய வெள்ளை தூண்கள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. 

மகாபலிபுரம், சென்னை

மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இங்கு பாறையில் செதுக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பல வரலாற்று சிற்பங்கள் உள்ளன. இது தமிழ்நாட்டின் கட்டிடக்கலையை எடுத்து காட்டுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link