ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகம்! ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!

Mon, 12 Jun 2023-3:56 pm,

ஜோதிடத்தில், சூரியனை கிரகங்களின் 'ராஜா' என்றும், புதன் 'இளவரசன்' என்றும் அழைக்கப்படுகிறார். சூரியன் ஏற்கனவே ரிஷப  ராசியில் அமர்ந்திருக்கும் நிலையில் இன்று புதன் ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ரிஷப ராசியில் சூரியனும் புதனும் இணைந்து புத்தாதித்ய ராஜயோகம் உருவாகும். இது அனைவருக்கும் நல்ல பலன்களை கொடுக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு புத-ஆதித்ய யோகம்,  ராஜயோகம் போன்ற பலன்களை கொடுக்கும்.

புத ஆதித்ய ராஜ யோகத்தினால், சில ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதை அதிகரிக்கும். எடுத்த எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த அதிஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி : ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தின் சிறப்பான பலன் கிடைக்கும். புதன்  ரிஷப ராசியில் சஞ்சரிப்பதாலும் ரிஷப ராசியிலிருந்து புதாதித்ய ராஜ யோகமும் உருவாவதாலும் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். புதனின் சஞ்சாரமும் இந்த ராஜயோகமும் உங்களுக்கு நிறையப் பணத்தைத் தரும். வேலை-தொழிலுடன் தொடர்புடைய நபர்கள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பெறலாம். 

கன்னி ராசி: புதன் சஞ்சாரத்தாலும், புதாதித்ய ராஜயோகத்தாலும் கன்னி ராசிக்காரர்களுக்குப் பணவரவு கிட்டும். இதன் போது, ​​புதிய வருமான வழிகளும் வகுக்கப்படும். இதனுடன், புதாதித்ய ராஜயோகத்தால்  திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் நிலவும். ஆன்மீகப் பணிகளிலும் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி: புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புதாதித்ய யோகமும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். தொழில்-வியாபாரத்தில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையின் ஒத்துழைப்பும், குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகளும் நடைபெறலாம். நீங்கள் வேலை மாற்றத்தை கருத்தில் கொண்டால், நேரம் சாதகமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link