கேகேஆர் அணிக்கு அடித்தது ஜாக்பாட்... இந்திய அணி கோச்சாக கம்பீர் செய்த விஷயம் - என்ன தெரியுமா?

Sat, 12 Oct 2024-9:57 pm,

வங்கதேசம் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி இன்று (அக். 12) ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. 

 

இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

சம்பிரதாயமாக நடைபெறுவதால் இந்திய அணி பிளேயிங் லெவனில் பல மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் ரவி பிஷ்னோய் விளையாடுகிறார். 

 

இந்திய அணியில் இந்த தொடரில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட் ஹர்ஷித் ராணா இதிலும் விளையாடவில்லை. 

 

இதன்மூலம், அவர் இந்திய அணிக்கு எந்த பார்மட்களிலும் அறிமுகமாகாத நிலையில், Uncapped வீரராகவே நீடிக்கிறார்.

 

அந்த வகையில், கொல்கத்தா அணி அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு வெறும் ரூ.4 கோடி கொடுத்து Uncapped வீரராகவே தக்கவைத்துக்கொள்ளலாம். 

 

அக். 31ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். தக்கவைக்கும் 6 வீரர்களில் நிச்சயம் ஒரு Uncapped வீரரை எடுக்க வேண்டும். 

 

ஏலத்திற்கு முன் தக்கவைத்தால் ரூ. 4 கோடி ஒதுக்க வேண்டும். அந்த வகையில் தற்போது கேகேஆர் ஹர்ஷித் ராணாவையும், ஆர்சிபி யாஷ் தயாளையும் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் ரெட்டி விளையாடிவிட்டதால் அவரை எஸ்ஆர்ஹெச் அணியால் தக்கவைக்க இயலாது.   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link