எருமை பால் vs மாட்டு பால் : குழந்தைகளுக்கு கொடுக்க இரண்டில் எது சிறந்தது?

Wed, 28 Aug 2024-9:38 am,

அதனால் அது உண்மையா?, குழந்தைகளுக்கு எருமை பால் கொடுக்கலாமா? மாட்டு பால் கொடுக்கலாமா? என்பதை தெரிந்து கொள்வோம். 

தினமும் காலை பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. அதுவும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கும். ஆனால் இதில் ஒரு விநோதமான சந்தேகம் பொதுவாக மக்களிடத்தில் இருக்கிறது. 

இது குறித்து ஆயுர்வேத டாக்டர் அமித் கூறுகையில், எருமைப்பால் பற்றி பரவிய இந்த வதந்தி முற்றிலும் தவறானது. எருமைப்பால் குழந்தைகளுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக பசும்பாலைப் போலவே நன்மை பயக்கும் என்கிறார் டாக்டர் அமித். 

பசும்பாலை விட எருமைப்பாலில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால், அது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். இருப்பினும், இது குழந்தையின் செரிமான திறனைப் பொறுத்தது. சில குழந்தைகள் எருமைப் பாலை எளிதில் ஜீரணிக்கிறார்கள், சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படலாம்.

எருமைப்பால் மனவளர்ச்சி குன்ற செய்யும் அல்லது அறிவு வளர்ச்சியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் டாக்டர் அமித் தெளிவுபடுத்தினார். சமச்சீர் உணவு, சரியான கல்வி மற்றும் ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றின் பங்களிப்பு குழந்தைகளின் மன வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. 

ஒரு குழந்தைக்கு எருமைப் பாலை ஜீரணிப்பதில் சிரமம் இருந்தால், அவர்களுக்கு பசு பால் கொடுக்கலாம். எருமைப்பால் குடிப்பதால் குழந்தைகளின் மூளை கெட்டியாகும் என்பது எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார் டாக்டர் அமித். 

இது முற்றிலும் தவறான தகவல். பசும்பாலை விட எருமைப்பாலில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிக புரதம், அதிக தாதுக்கள் உள்ளன. எருமை பால் குடிப்பதில் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது என்றால் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link