Post Office: வெறும் ரூ.5000 முதலீடு செய்து பம்பர் லாபத்தை அள்ளலாம்

Fri, 11 Nov 2022-7:05 pm,

வரும் நாட்களில் 10 ஆயிரம் புதிய தபால் நிலையங்கள் திறக்கப்படும் என இந்திய தபால் அதிகாரியிடம் இருந்து கிடைத்த தகவல் முலம் தெரிகிறது. ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கி வசதியை வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலிருந்தோ தபால் நிலையத்தைத் திறந்து நீங்களும் எளிதாக பணம் ஈட்டலாம். 

நீங்கள் வீட்டிலேயே ஒரு தபால் அலுவலகத்தைத் திறந்து, ஒவ்வொரு மாதமும் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இது ஒரு வணிக மாதிரியாகும். இதில் துவக்கத்தில் ரூ 5000 மட்டுமே தேவைப்படும்.

இரண்டு வகையான தபால் அலுவலக ஃபார்ன்சைஸ் உள்ளன. நீங்கள் ஒரு உரிமையாளராக ஃபார்ன்சைஸ் திறக்கலாம் அல்லது முகவராகியும் பணம் ஈட்டலாம். தபால் அலுவலகத்திற்கு சொந்த நெட்வொர்க் இல்லை, ஆனால் அஞ்சல் சேவையின் தேவை இருந்தால், அங்கு உரிம மாதிரியைத் தொடங்கலாம். 

அஞ்சல் அலுவலக உரிமையாளருக்கு, நீங்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 15 நாட்களில் இதற்கான விடை கிடைக்கும். இதில் கமிஷன் அடிப்படையில் ஊதியம் பெறுகிறோம். சம்பளம் பெறுவதற்கான நிலையான தொகை இதில் இல்லை. 

ஃபார்ன்சைஸ் உரிமையைப் பெற உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு இருந்தால் நல்லது. உங்கள் பகுதி எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link