குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

Sat, 20 Apr 2024-4:40 pm,

குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் வியாழன் சுப ஸ்தானத்தில் இருந்தால் அவர் பல நன்மைகளைப் பெறுவார்.

மே 1 ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் குரு நுழைவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். குரு ரிஷப ராசியில் நுழைவதால் குபேர யோகம் உருவாகி வருகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். குருபகவானால் உருவாகும் குபேர யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளன என தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சுப பலன்களை அடைவார்கள். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் விரிவடைய வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். 

ரிஷபம்: ரிஷப ராசியின் லக்னத்தில் மிகவும் மங்களகரமான குபேர யோகம் உருவாகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியை அடைவார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. சுக்கிரன் மற்றும் குரு அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் பிரச்சனைகள் விலகும். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும். 

கடகம்: ஜோதிடத்தின் படி, கடக ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். மன அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வுடன் போனஸும் கிடைக்கலாம். 

 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம் சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைவார்கள். பொருள் இன்பங்களுக்குக் குறைவே இருக்காது. தொழிலில் சாதகமான பலன்கள் காணப்படும். முன்னேற்றம் காணப்படும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செய்யலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு சாதகமான நேரமாக இருக்கும். முதலீட்டில் லாபம் அதிகமாகும். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்க இது உகந்த நேரமாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். காவல்துறை, நிர்வாகம் மற்றும் ராணுவத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஆதாயமடைவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link