Health Alert சைவ உணவு உண்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்
சைவ உணவு உண்பவர்களில் Vegan மற்றும் Vegetarian பற்றி சில குழப்பங்கள் உள்ளன. இரண்டு உணவு முறைகளும் பொதுவானவை என்றாலும், ஒரே மாதிரியானவை அல்ல. வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள், விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை சாப்பிட மாட்டார்கள்.
பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற விலங்குகளிடம் இருந்து பெறும் பொருட்களை சாப்பிட்டாமல் அவற்றின் துணை தயாரிப்புகளை சாப்பிடுபவர்கள். உதாரணமாக பனீருக்கு பதிலாக சோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் டஃபூ வை வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள் சாப்பிடுவார்கள்.
உணவு வழிகாட்டுதல்களின்படி, ஒருவர் இறைச்சி மற்றும் தாவரங்களின் கலவையை சாப்பிட வேண்டும், இதனால் அவை உடலுக்குத் தேவையான ஒவ்வொரு ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்யும். வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடும்போது, வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு, அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடும். எனவே, ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்க இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளைச் சேர்க்கத் தொடங்குங்கள்.
சைவமும் உணவு உண்பது இன்று மிகவும் பிரபலமான உணவு முறை. அதிலும் Vegan மற்றும் Vegetarian என இரு முறைகளை பின்பற்றுகின்றனர்.
இது உடலுக்கு நல்லது என்றாலும், அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பெற்றால் மட்டுமே ஒரு உணவு ஆரோக்கியமானது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அசைவ உணவு உண்பவர்கள் உண்ணும் உணவுகளுடன் ஒப்பிடுகையில், சைவ உணவு மற்றும் சைவ உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள் கலோரிகளில் குறைவாக இருக்கும்.
கலோரிகள் உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரம், எனவே அவற்றை உங்கள் உணவில் சரியான அளவில் சேர்ப்பது முக்கியம்.
சைவ உணவு உண்பவர்கள் பொதுவாக நிறைய நார்ச்சத்து கொண்ட உணவை சாப்பிடுவார்கள், இதனால் அவர்கள் தண்ணீர் குடிப்பது முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நார்ச்சத்து எளிதில் ஜீரணமாகி வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்றாலும் சிலருக்கு செரிமானமாவது கடினமாக இருக்கலாம், எனவே சைவ உணவுக்காரர்கள் அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
தானியங்களை முளை கட்டி சாப்பிடும்போது நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இது நல்லது என்றாலும், அதனுடன் தண்ணீர் அதிகம் குடிப்பதையும் உறுதி செய்வது அவசியம்