Health Tips: மறதியை ஒழிக்க இந்த ஐந்தும் முக்கியம்... தவறாமல் சாப்பிடுங்கள்

Sun, 04 Feb 2024-9:19 pm,

வயது ஆக ஆக, மூளை செல்களின் செயல்பாடுகளிலும் சற்று தொய்வு ஏற்படும். அதனால், உங்களுக்கு 50 வயது தாண்டிவிட்டால், இவற்றை சாப்பிடுவதன் மூலம் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கலாம், ஞாபக மறதியையும் தவிர்க்கலாம்.

 

குறிப்பாக, பாதாம், முந்திரி போன்ற கொட்டைகள் சார்ந்த உணவு பொருள்கள் உங்கள் மூளையின் வளர்ச்சிக்கும் பெரும் ஊட்டம் அளிக்கக்கூடியவை. அந்த இந்த ஐந்து நட்ஸ்களை உங்களின் அன்றாட உணவுகளில் நீங்களும் சேர்த்துக்கொள்ளலாம். 

 

பிஸ்தா: இது சிறந்த நட்ஸ்களில் ஒன்று. இது மூளையை உடனே சுறுசுறுப்பாக்கும். 

வால்நட்ஸ்: உங்களுக்கு வயதாகும் தோற்றத்தை இது குறைக்கும். மேலும், உங்கள் மூளை சார்ந்த ஏற்படக்கூடிய நோய்களை தடுக்கவும் உதவும். 

பாதாம்: பாதாம் ரைபோஃபிளாவின் மற்றும் பிற சத்துகளை உள்ளடக்கியது. இதனால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். 

 

முந்திரி: இதில் மேக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளதால் மூளைக்கு பயனளிக்கும். 

 

மக்காடாமியா: இதில் அதிக மினரல்கள் உள்ளதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link