ஐபிஎல் 2025ல் க்ளென் மேக்ஸ்வெல்லை குறிவைக்கும் 3 அணிகள்!

Wed, 29 May 2024-11:40 am,

ஆஸ்திரேலியா வீரர் ​​க்ளென் மேக்ஸ்வெல் தற்போது ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் அவர் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆர்சிபி அணி அவரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், ஏலத்தில் மீண்டும் எடுக்க முயற்சி செய்யக்கூடும். ஒருவேளை க்ளென் மேக்ஸ்வெல் ஏலத்தில் வந்தால் அவரை 3 அணிகள் குறிவைத்துள்ளன. 

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே அணியை ஆர்சிபி தோற்கடித்து பிளே ஆப்க்கு சென்றுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையே நல்ல போட்டி உருவாகி உள்ளது. 

 

க்ளென் மேக்ஸ்வெல் ஒருவேளை சென்னை அணிக்கு வந்தால் அவரது ஆல் ரவுண்டர் திறமை சேப்பாக்கம் மைதானத்தில் உதவிகரமாக இருக்கும். சிஎஸ்கே சில சீசன்களுக்கு முன்பே அவரை குறிவைத்தது.

 

குஜராத் டைட்டன்ஸ்

க்ளென் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி விடுவித்தால் அவரை தங்கள் அணியில் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அதிகம் முயற்சி செய்யும். டேவிட் மில்லருக்கு பதில் ஜிடி அவரை குறிவைக்கும்.

 

குஜராத் அணிக்கு நம்பர் 4 மற்றும் நம்பர் 3ல் விளையாட அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. மேலும் அவரது சுழற்பந்து வீச்சு அணிக்கு கூடுதல் சாதகமாக அமையும். 

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர்களது அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் இல்லை. இதனாலேயே சில போட்டிகளில் தோல்வி அடைகின்றனர். 

 

மேக்ஸ்வெல் ராஜஸ்தான் அணியில் எடுக்கப்பட்டால் நம்பர் 4ல் சிறப்பாக விளையாட கூடும். ஷிம்ரோன் ஹெட்மியர் அல்லது ரோவ்மேன் பவல் ஆகியோருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link