காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!

Thu, 05 Sep 2024-5:03 pm,

“இன்று, நான் எனக்குள் இருக்கும் திறமைகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் எனது திறன்களை முழு மனதுடன் நம்புகிறேன்” 

இது உங்கள் மீதும், உங்கள் திறமை மீதும் உங்களுக்கே அதிகமாக நம்பிக்கை வரவழைக்க செய்யும். 

"எனக்கு வரும் வாய்ப்புகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், அவற்றை நம்பிக்கையுடன் கையாள்வேன்”

இது, உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் விஷயங்களை, நீங்கள் பாரட்டி தக்க வைத்துக்கொள்ள உதவும். 

“இன்று, நான் பாசிடிவ் சிந்தனைகளில் கவனம் செலுத்தி, நெகடிவ் சிந்தனைகளை வெளியேற்றுகிறேன்”

இது, உங்கள் வாழ்வில் இந்த பொழுதில் என்ன சிரமம் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆளுமையை உங்களுக்கு கொடுக்கும்.

“எனது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களை நான்தான் கையாள்கிறென்”

பல சமயங்களில், நாம் செய்யும் விஷயங்களுக்கு நாமே பொறுப்பெடுத்து கொள்வதில்லை. எனவே, இந்த மந்திரத்தை சொல்வதால், நாம் நமது எண்ணம் மற்றும் செய்ல்களை கட்டுப்படுத்தலாம்.

“நான் நன்மையையே செய்கிறேன்..எனக்கு நல்லதே நடக்கும்..”

நீங்கள் நன்மையையே நினைத்து, அதற்குறிய செயல்களிலேயே ஈடுபடும் போது, உங்களை நோக்கி கண்டிப்பாக நல்ல விஷயங்களே வந்து சேரும்.

“எனது திறன்களில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், சரியான முடிவுகளை எடுப்பேன் என்று நம்புகிறேன்”

உங்களை நீங்கள் முதலில் நம்பினால்தான், உங்களை சுற்றி இருப்பவர்களும் உங்களை நம்ப ஆரம்பிப்பார்கள். எனவே, உங்களை நம்புவதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். 

“எனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் எனது வாழ்க்கையில் வெற்றியையும் நான் ஈர்க்கிறேன்”

உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல ரிசல்ட் வர விரும்பினால், நீங்கள் இந்த மந்திரத்தை தினமும் சொல்லலாம். 

“நான் புதிய வாய்ப்புகளுக்காக என் மனதை திறந்து வைத்திருக்கிறேன். அவை என்னை தேடி வரும் போது அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்” 

வெவ்வேறு வாய்ப்புகளுக்காக, நம் மனதை திறந்து வைத்துக்கொண்டால், நம் வாழ்விலும் புதிய மாற்றங்கள் தேடி வரும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link