தாகம் இல்லாத போதும் தண்ணீர் குடித்தால் ஆபத்தா?
![water water](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/10/23/331044-water-1.jpg?im=FitAndFill=(500,286))
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், நீரிழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
![water water](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/10/23/331043-water-2.jpg?im=FitAndFill=(500,286))
தாகம் இல்லாமல் தண்ணீர் குடித்தால் சில சந்தர்ப்பங்களில் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, தாகம் எடுக்கும் போது மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.
![water water](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/10/23/331042-water-3.png?im=FitAndFill=(500,286))
நீர்ச்சத்து குறைபாடு மட்டுமின்றி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலும் சிறுநீரக கற்கள் உருவாகும் என மருத்துவர் எச்சரித்துள்ளார். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் ஆற்றல் மேம்படும். உங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் செய்ய நீங்கள் கொஞ்சம் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.
தண்ணீர் குடிப்பது மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும், நீங்கள் அமைதியாகவும் திருப்தியாகவும் உணரலாம்.