மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!

Fri, 05 Jul 2024-12:42 pm,

மேற்கு நைல் வைரஸ் எனப்படும் புதிய ஆபத்தான வைரஸ் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஸ்பெயினின் செவில்லி நகரில் ஒரு நபருக்கும், இத்தாலியின் மொடெனா நகரில் உள்ள ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் உடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், உடல் வலி வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பால் தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த புதிய வகை தொற்று நோய் மனிதர்களுக்கு மட்டும் பரவாமல், கொசுக்களிலும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் இந்த கொசுக்கள் ஏற்கனவே நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று டெங்கு போன்ற நோய்களை பரப்பி வருகிறது. வெளிநாட்டு பயணிகள் வருகையால் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link