கணிணியில் அதிகம் வேலையா... கண்ணை காக்கும் ‘இந்த’ உணவுகள் டயட்டில் இருக்கட்டும்!

Wed, 20 Sep 2023-1:02 am,

டிஜிட்டல் உலகில் கேட்ஜெட்டுகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும்,  கண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதுபோன்ற சூழ்நிலையில், கண்களை ஆரோக்கியமாக வைத்து, கண் பார்வையை வலுவடையச் செய்யும் பொருட்களை  நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

கண் பார்வை என்றதும் அனைவருக்கு நினைவில் வருவது கேரட் என்றால் மிகையில்லை. கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்பார்வையை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ (கரோட்டின்), வைட்டமின் "சி" மற்றும் வைட்டமின் "பி" ஆகியவை காணப்படுகின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு மற்றும் லுடீன் போன்ற கூறுகள் கண்பார்வையை கூர்மையாக்கும்.

டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற கடல் உணவுகள் விழித்திரையை பலப்படுத்துகின்றன. இந்த மீன்களில் DHA எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது, இது விழித்திரையின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.

 

ஆம்லா என்னும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இதனால் கண்பார்வை வலுவடைகிறது. நெல்லிக்காய் கண் பார்வைக்கு மிகச் சிறந்த  ஆதாரம். 

பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்களிலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் ஏ காணப்படுகின்றன. இவை கண் பார்வையை மேம்படுத்தும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link