உலக கோப்பையை நடத்துவதன் மூலம் இந்தியாவிற்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

Fri, 06 Oct 2023-10:40 am,

அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலக கோப்பை போட்டி நவம்பர் மாதம் வரை இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடைபெற உள்ளது.

 

கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஐசிசி போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது.  அதன் பிறகு தற்போது இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

 

2019ல் உலக கோப்பையை விட இந்த முறை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மூலம் அதிக வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.  

 

உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவதால், விமான டிக்கெட்கள், ஓட்டல் அறைகள் விலை என அனைத்தும் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்கம் 0.15% - 0.25% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதன் மூலம் நாட்டின் ஜிஎஸ்டி வருவாயாக அரசுக்கு அதிக லாபம் கிடைக்கும், இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூலம், இந்தியாவிற்கு சுமார் 22,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link