உலர் பழங்களின் சத்து முழுமையாக கிடைக்கணுமா... ‘இப்படி’ சாப்பிடுங்க!

Fri, 01 Sep 2023-5:05 pm,

உலர் பழங்கள் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. மூளை ஆரோக்கியம் முதல், உடல் எடை இழப்பு வரை... இதன் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

உலர் பழங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற எந்த உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.  

ஊறவைத்த பிறகு எந்த உலர்ந்த பழங்களை சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு.  சில உலர் பழங்களை ஊறவைத்து உண்ண வேண்டும். இதனால் முழு பயன் கிடைக்கும். எனினும் சில உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிடக் கூடாது.

அனைத்து உலர்ந்த பழங்களையும்  ஊறவைத்து சாப்பிடுவது பயனளிக்காது. ஏனென்றால் அனைத்து உலர் பழங்களையும் ஊறவைத்து சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும் என்பது அவசியமில்லை. பாதாம், திராட்சை மற்றும் பிளம்ஸ் போன்ற உலர் பழங்களை ஊறவைப்பது அதிக நன்மை பயக்கும்.

முந்திரி, வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களை ஊற வைக்காமல் உட்கொள்ளலாம். சில உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள், குறிப்பாக அக்ரூட் பருப்புகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றை ஊறவைத்தால் இந்த சத்துக்கள் அழிக்கப்படலாம். எனவே ஊறவைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். 

பேரீச்சம்பழத்தை ஊற வைத்து ஊற வைக்காமல் என இரண்டு வழிகளிலும் உட்கொள்ளலாம், அவற்றை ஊற வைத்தும் சாப்பிடலாம் மற்றும் உலர்ந்த வடிவத்திலும் சாப்பிடலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link