வக்ரமடையும் புதன்... வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

Tue, 08 Aug 2023-5:45 pm,

புதன் கிரகம் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது. யாருடைய ஜாதகத்தில் புதன் உயர்வாக இருக்கிறாரோ, அத்தகையவர்கள் புத்திசாலித்தனத்தின் காரணமாக நிறைய பெயர், செல்வம் மற்றும் புகழைப் பெறுகிறார்கள்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி அதிகாலை 1.28 மணிக்கு சிம்ம ராசியில் புதன் வக்ர நிலையை அடைந்து செப்டம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 1.50 மணி வரை அந்த நிலையிலே நீடிப்பார். 

சிம்மம்: வக்ரம் அடையும் புதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் நிதித்துறையில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். 

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு புதன் வக்ர நிலை அசுப பலன்களைத் தரும். இதன் போது உடல் நலம் கெடவும் வாய்ப்பு உள்ளது. நிதி பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் பெற்றோர் அல்லது மனைவியுடன் தகராறு ஏற்படலாம்.

மேஷம்: வக்ரமடையும் புதன் மேஷ ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகளை உருவாக்கலாம். இந்த நேரத்தில் தன்னம்பிக்கை இழந்து பொருளாதார நிலை மோசமடையலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link