EPS Pension: EPF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள்... முழு விவரம் இதோ

Thu, 29 Aug 2024-1:23 pm,

இந்தியாவில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, முதுமையின் போது ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் பொதுவாக 58 வயதில் EPF ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறார்கள். 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தையும் (EPS) நடத்துகிறது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) பல வகையான ஓய்வூதியப் பலன்களை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தகுதியான சேவையைச் செய்து 58 வயதை எட்டியவுடன் ஓய்வு பெற்றால் இந்த ஓய்வூதியன் கிடைக்கும். 

ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 வருட சேவையை முடித்தவராகவும் இருந்து EPF அல்லாத நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். இருப்பினும், இந்த ஓய்வூதியம், ஓய்வூதிய வயதான 58 வயதுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு ஆண்டும் 4% குறைவாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் 58 வயதில் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்தால், 57ல் ரூ.9,600 மற்றும் 56ல் ரூ.9,200 ஓய்வூதியமாக கிடைக்கும்.

இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார். இதைப் பெற, 10 ஆண்டுகள் சேவை அல்லது குறைந்தபட்ச வயது வரம்பான 50 வயது ஆகியவற்றை பூர்த்தி செய்யத் தேவையில்லை. ஒருவர் ஒரு மாத பங்களிப்பு செய்திருந்தாலும் இந்த ஓய்வூதியத்தைப் பெற முடியும். 

இறந்த EPFO ​​உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கு இந்த ஓய்வூதியம் நிதி உதவியை உறுதி செய்கிறது. இந்த அம்சத்தின் மூலம் உயிருடன் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கிறது. கணவன் / மனைவி துணையை இழந்த பிறகு அவர்களின் நிதித் தேவைகளை நிர்வகிக்க இது உதவுகிறது. EPS 95 இன் கீழ் குழந்தைகள் ஓய்வூதியம், இறந்த EPFO ​​உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவி வழங்குகிறது. குழந்தைகள் 25 வயதை அடையும் வரை மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 

EPF கணக்கு வைத்திருப்பவர் திருமணமாகாதவராக இருந்து இறந்துவிட்டால், அவரது தந்தை மற்றும் தந்தை இறந்த பிறகு, அவரது தாயார் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார்கள்.

இறந்த உறுப்பினரின் வாழ்க்கைத் துணையும் உயிருடன் இல்லையென்றால், அனாதை ஓய்வூதியம் மூலம் அவரது குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது. இந்த ஓய்வூதியத்தில் மாதாந்திர தொகை வழங்கப்படுகின்றது. இது அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி செலவுகளை நிர்வகிக்க உதவுகிறது.

மனைவி அல்லது குழந்தைகள் இல்லாத EPFO ​​உறுப்பினர் மரணம் அடைந்தால், நாமினியாக பரிந்துரைக்கப்பட்ட பயனாளிக்கு நாமினி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு நிதி உதவி கிடைக்க வேண்டும் என்ற பிஎஃப் உறுப்பினரின் நோக்கம் நிறைவேறி, நாமினிக்கு பிஎஃப் தொகை கிடைப்பதை இது உறுதி செய்கிறது.

அனைத்து விதமான ஓய்வூதியங்களும் பல்வேறு சூழ்நிலையில் ஓய்வூதியத்தை நாடுபவர்களுக்கு ஏற்றவாறு வடிவமக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இபிஎஃப் ​​உறுப்பினர்கள் (EPF Members) மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விரிவான சமூக பாதுகாப்பு கவரேஜ் உறுதி செய்யப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link