Bitter Gourd: அளவிற்கு அதிகமான பாகற்காய் விஷமாகும்; எச்சரிக்கும் நிபுணர்கள்

Wed, 24 Aug 2022-6:08 pm,

பாகற்காய் மிகவும் கசப்பானது தான். ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அடிக்கடிபாகற்காயை ஏதோ ஒரு வடிவில் எடுத்துக் கொள்வது, இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு: நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் சாப்பிடக்கூடாது.

கர்ப்பிணி பெண்கள்

பாகற்காய் சாறு அதிகம்  உட்கொள்வதால், மாதவிடாய் சுழற்சி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும், எனவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. இது உங்கள் சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link