பலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்

Fri, 26 May 2023-5:09 pm,

பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.

 

பலாப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிப்பதால் நீரிழிவு மருந்தின் அளவை மாற்ற வேண்டியிருக்கும்.

 

அறுவை சிகிச்சையின் போது மற்றும் அதற்குப் பிறகு பயன் படுத்தப்படும் மருந்துகளுடன் இணைந்தால் பலாப்பழம் அதிக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

 

பலாப்பழத்தில் அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, எனவே அதை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

 

சிலருக்கு பலாப்பழம் சாப்பிடுவது ஒவ்வாமையாக இருக்கலாம், இதன் காரணமாக அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

 

இரத்தம் சம்பந்தமான பிரச்சனை அல்லது கோளாறு உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link