மதம்கொண்ட யானை... அகமதாபாத்தை அலறவிட்ட ரோஹித் - அம்பயரிடம் சீன் காட்டிய மாஸ் சம்பவம்!

Sat, 14 Oct 2023-10:10 pm,

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி நடப்பு தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை இந்தியா வென்றது. 

 

ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என பெருமையை தக்கவைத்தது. இதோடு, உலகக் கோப்பை தொடரில் 8 முறை பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது. 

 

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 117 பந்துகளை மீதம் வைத்தும் வெற்றி பெற்ற நிலையில், நெட் ரன்ரேட் அதிகரித்துள்ளது. இதன்மூலம், நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்தது. 

 

இந்தியாவின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணம் என்றாலும், பேட்டிங்கில் ரோஹித்தின் வெறியாட்டம் பலராலும் மறக்க முடியாது. 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்கள் அடித்தார்.

 

அதில் அவர் அடித்த சிக்ஸர்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிலையில், ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்த பின் கள நடுவர் மராயிஸ் எராஸ்மஸிடம் தனது 'Arms' காண்பித்து தான் பலசாலி என்பதுபோல் நகைச்சுவை செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக, எராஸ்மஸ் இன்று இரண்டு முறை தவறான முடிவை தெரிவித்தார். சௌத் சாகீல், ஹரிஸ் ராவுஃப் ஆகியோர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகினார். ஆனால், இவற்றை எராஸ்மஸ் முதலில் நாட் அவுட் என அறிவித்த நிலையில், டிஆர்எஸ் மூலம் அவை அவுட் என அறிவிக்கப்பட்டது.

 

ரோஹித் சர்மா கடந்த போட்டியில் 131 ரன்களை அடித்த நிலையில், இன்று 86 ரன்களை அடித்து மொத்தம் 217 ரன்களை எடுத்துள்ளார். அதன்மூலம், நடப்பு தொடரில் இந்திய அணிக்கு அதிக ரன்களை அடித்தவராக அவர் உள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link