இந்த பழக்கங்கள் கொண்டவர்களிடம் ஒருபோதும் லட்சுமி நிலைக்காது: எச்சரிக்கும் கருட புராணம்
)
கருட புராணத்தின் படி, பணம் மீது பேராசை கொண்டவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மறுபுறம், மற்றவர்களின் செல்வத்தை அபகரிக்க முயல்பவர்கள், அத்தகையவர்கள் எந்த பிறப்பிலும் திருப்தி பெற மாட்டார்கள்.
)
நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. ஆனால் யாரையும் அவமானப்படுத்த முயற்சிக்காதீர்கள். பணக்காரர்கள் மற்றவர்களை இழிவுபடுத்த முயற்சிப்பது பெரும்பாலும் காணப்படுகிறது. கருட புராணத்தின் படி, அவ்வாறு செய்வது சரியல்ல. இப்படிப்பட்டவர்களிடம் லட்சுமி கோபித்துக்கொண்டு விலகிச் செல்கிறார்.
)
கருட புராணத்தின் படி, ஒரு நபர் எப்போதும் சுத்தமான ஆடைகளை அணிந்து, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்படி இல்லாதவர்களிடம் லட்சுமி தேவி இருக்கமாட்டார்.
தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் கருட புராணத்தின் படி, இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இரவில் தயிர் சாப்பிட்டால் ஆயுட்காலம் குறையும் என்பது நம்பிக்கை.
கருட புராணத்தின் படி, பிறரைக் கண்டிப்பது அல்லது குறை கூறுவது பாவம். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.