மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்

Sat, 13 Apr 2024-9:47 am,

குரு பெயர்ச்சி: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசிரில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

ராசிகளில் தாக்கம்: இந்த குரு பெயர்ச்சி பெரும்பாலும் அனைவருக்கும் நல்ல பலன்களையே அளிக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் மிக அதிக அளவில் நன்மை கிடைக்கும். இவர்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் மேலோங்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். இவர்களுக்கு திடீரென வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதாலும் பண வரவுகளாலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். மேஷ ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டில் பணப் பற்றாக்குறை இருக்காது, மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கடகம்: குரு பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், கடக ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பரிமாணம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரும் வருமானம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன்களை பெறவுள்ளனர். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் விருப்பப்படி வெற்றி கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் நாட்டும் உள்ளவர்கள் இந்த காலத்தில் அதை தொடங்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

கன்னி: கன்னி ராசிக்காரர்களும் 2024 குரு பெயர்ச்சி பெரிய அளவிலான நல்ல பலன்களை அளிக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்படிருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலைகளையும் தொடங்கலாம். பண வரவு அதிகமாகும். 

குரு பகவானின் அருள் பெற,  குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;  குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link