மருதாணியை இந்த முறையில் முடிக்கு தடவினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்!

Wed, 31 Jul 2024-7:05 pm,

மருதாணி பல ஆண்டுகளாக விசேஷ நாட்களில் பயன்படுகிறது. திருமணம் தொடங்கி, சடங்கு வரை மருதாணி விசேஷ வீடுகளில் முக்கியமாக இருந்து வருகிறது.

 

மருதாணி மயிர்க்கால் மற்றும் உச்சந்தலையில் ஆழமான கண்டிஷனிங் செய்து பலப்படுத்துகிறது. மேலும் தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. 

 

மருதாணி முடியில் உள்ள அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் ஆகியவற்றை நீக்குகிறது. மேலும் உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க மருதாணி உதவுகிறது. 

 

மருதாணி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மருதாணியை முட்டை, தயிர் போன்ற மற்ற பொருட்களுடன் சேர்ந்து தலைக்கு தடவலாம். 

 

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனை ஏற்படும். இந்த சமயத்தில் மருதாணி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

 

மருதாணியை தனியாகப் பயன்படுத்தினாலும், மற்ற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் தலைமுடிக்கு அதிக நன்மைகளை தருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link