சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு மன மகிழ்ச்சி, செல்வ செழிப்பு

Thu, 25 Aug 2022-6:34 pm,

பொதுவாக சனி பகவானின் நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிலை மாற்றம் 3 ராசிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. சனிபகவானின் அருளால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அடைவார்கள். மார்க்கி சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

சனி பகவான் மகர ராசியிலேயே இருக்கிறார், இதே ராசியில் மார்க்கியாவார். சனி சஞ்சரிக்கும் போது, ​​மகர ராசியில் ஷஷ் என்ற பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகும். இது இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த பயணங்களால் அனுகூலமான பல பலன்களை பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் பெற விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என காத்திருப்பவர்களின் கனவு நிறைவேறும். பண வரவு அதிகமாக இருக்கும் ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். இருப்பினும் வருமானம் அதிகரிப்பதால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள்.

மீன ராசிக்காரர்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மாற்றத்தை தேடுபவர்கள் இந்த நேரத்தில் அதற்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நன்றாக உழைத்தால், அபரிமிதமான முன்னேற்றத்தை அடையலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link