நான் அழுவதை தேசம் பார்க்க வேண்டாம் - ஹர்மன்பிரீத் கவுர் கண்ணீர் வார்த்தை

Thu, 23 Feb 2023-10:23 pm,

20 ஓவர் பெண்கள் உலக கோப்பையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

 

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 172 ரன்கள் அடிக்க, இந்திய அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவர் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்மன்பிரீத் கவுர், நான் அழுவதை என் தேசம் பார்க்க வேண்டாம் என்பதற்காக கண்களுக்கு கண்ணாடி அணிந்து வந்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணியாக சாதனை படைத்திருக்கும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link