கோடையில் வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டு பாருங்க

Fri, 10 Jun 2022-5:58 pm,

ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இவை புற்றுநோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், இதை தோல் உரித்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கோடையில் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை மிக அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னையைப் போக்க, தினமும் கடலையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள். இதில் உள்ள பொட்டாசியம், தாமிரம், கால்சியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்க வல்லது.  ஊறவைத்த வேர்க்கடலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் பெறலாம். இது தவிர, இரவில் கனமாக சாப்பிட விருப்பம் இல்லை என்றால், நீங்கள் அதை இரவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள் ஊறவைத்த பச்சை வேர்க்கடலையை சாப்பிடும்போது, ​​அது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேர்க்கடலையை பச்சையாக உட்கொள்ளலாம்.

ஊறவைக்கப்பட்ட வேர்க்கடலையை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

மூட்டுகளில் அதிக வலி இருந்தால், வேர்க்கடலையை பச்சையாக ஊறவைத்து உண்பது நன்மை பயக்கும். இதில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் மூட்டு மற்றும் முதுகுவலியைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link