அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா... காரணங்கள் ‘இதுவாக’ இருக்கலாம்!

Wed, 16 Aug 2023-2:42 pm,

சிலர் தலைவலி பிரச்சனையை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், நீர் சத்து பற்றாக்குறை போன்றவை. அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டால், அதற்கு எளிதில் தீர்வு காணலாம். 

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும்.தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும். 

உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். எனவே அடிக்கடி காலை எழுந்த உடம் தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.

போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம் என்று சொல்லலாம்.குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். 

 

இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம். தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை உள்ளது. 

உங்கள் உடலில் சர்க்கரை அசாதாரணமாக இருந்தால், காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது. அதற்கு பதிலாக உடனடி தீர்வைத் தரும் எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link