மாரடைப்பு இவர்களுக்கு வராது..! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..!

Mon, 20 Mar 2023-4:01 pm,

அண்மைக்காலமாக மாரடைப்பு அபாயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றாமல் இருப்பது.

போதிய தூக்கமின்மை, முறையான நேரத்தில் டையட் எடுத்துக் கொள்ளாதது, ஆரோக்கியமான உணவுகளை புறக்கணித்து, எண்ணெய் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை எல்லாம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் அறிகுறிகள்.

நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் முறையாக அன்றாட வாழ்க்கையில் கடைபிடியுங்கள். சரியான நேரத்துக்கு தூங்கி எழுந்து, உடற்பயிற்சி செய்து, சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். 

அண்மையில் வெளியான ஆய்வு முறை போதிய தூக்கமில்லாதவர்களுக்கும், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கும் அதிக மாரடைப்பு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

அதனால் இளைஞர்கள் முதல் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link