தினமும் தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்தால் முடி உதிருமா?

Thu, 12 Jan 2023-1:17 pm,

அதிகப்படியான ஷாம்பூக்கள் முடியை சேதப்படுத்தும், அதனால் லேசான க்ளென்சர் கொண்ட ஷாம்பு வகைகளை பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது.

 

உச்சந்தலையில் அழுக்கு இருந்தால் அந்த பகுதியில் மட்டும் ஷாம்பூவை பயன்படுத்தி அலசுங்கள், முடியின் முனைகளில் அழுக்கு இல்லாவிட்டால் ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.

 

ஈரமான முடியை உலர்த்த அடிக்கடி முடி உலர்திகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, இது முடி உதிர்விற்கு வழிவகுக்கும்.

 

கண்டிஷனரை எப்போதும் முடியின் முனைகளில் மட்டுமே பயன்படுத்துங்கள், உங்கள் முடியின் வேர்களில் படும் கண்டிஷனரை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கும்.

 

இரவில் முடிக்கு அதிகமாக எண்ணெய் தேய்க்கக்கூடாது மற்றும் முடி ஈரமாக இருக்கும்போது சீப்பை பயன்படுத்தி  சீவக்கூடாது.  அப்போதும் முடி உதிராமல் இருக்க அகலமான பற்கள் கொண்ட சீப்பையே பயன்படுத்துங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link