முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!

Sun, 20 Oct 2024-3:15 pm,

நியூசிலாந்து அணியுடன் முதல் டெஸ்டில் தோல்விக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியாவின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்விக்கு பிறகு தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போதே இந்தியாவின் தோல்வி உறுதியானது. 

 

இருப்பினும் இரண்டாவது டெஸ்டில் சர்ஃபராஸ் கான்-ரிஷப் பந்த் கூட்டணி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் அடித்தது இந்தியா.

 

இருப்பினும் 5வது நாளில் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்களை எடுத்தாலும் தோல்வியை தழுவியது இந்தியா. நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த வெற்றி மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து இந்தியாவில் வெற்றியை பதிவு செய்துள்ளது.  இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த தோல்வியை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இடையே நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது.

 

2வது டெஸ்ட் போட்டி அடுத்த வாரம் புனேயில் நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த போதிலும் அடுத்த 4 டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்று வென்றது இந்தியா.

 

"நியூசிலாந்து மிகவும் சிறப்பாக பந்துவீசியது. அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தவறிவிட்டோம். இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலையில் இருந்துள்ளோம். எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் என்ன தேவை என்பது எங்களுக்கு தெரியும்" என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link