அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி: உருக்கமாக சொன்ன அந்த வார்த்தைகள்..!

Tue, 09 Jan 2024-5:55 pm,

இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 2023-ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வென்றார். டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

 

விருதை பெற்றுக் கொண்ட பிறகு, பேசிய முகமது ஷமி, "கடின உழைப்புக்கு கிடைத்த பலன் இந்த விருது" என்று கூறினார். "என் பெற்றோர், குருமார், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த வெற்றிக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும், "கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதும், வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என்று முகமது ஷமி உறுதியாக கூறினார். "எந்த சூழலிலும் உங்களின் உழைப்பை கைவிடாதீர்கள்" என்று அவர் அறிவுறுத்தினார்.

 

ஒருவர் கடின உழைப்பை தொடர்ந்தால் அவருக்கு நிச்சயமாக பலன் உண்டு. உங்கள் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என இருக்கிறதோ அது நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்.

 

எந்த சூழலிலும் உங்களின் உழைப்பை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். 

 

அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

முகமது சமி இப்போது கணுக்கால் காயம் காரணமாக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வருகிறார்.

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link