இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

Wed, 26 Jun 2024-8:03 pm,

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இன்னும் மொத்தமாக 3 போட்டிகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், சவுத் ஆப்ரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை ஜூன் 27 அன்று அரையிறுதியில் மோத உள்ளது. 2022 டி20 உலக கோப்பைக்கு இந்தியா பலி தீர்க்குமா என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

கயானாவில் நடைபெற உள்ள இந்த மைதானத்தில் கடந்த 18 நாட்களாக எந்த ஒரு போட்டியும் நடைபெறவில்லை. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாடும் இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸின் சராசரி 145.6 ஆக இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அது 77.4 ஆக உள்ளது.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்காலும். அதே சமயம் இங்கிலாந்தில் அடில் ரஷித் மற்றும் மொயின் அலி இந்தியர்களின் விக்கெட்களை எடுக்க கூடும்.

 

இதுவரை இந்த மைதானத்தில் 18 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link